முஹம்மது ஃபைரோஸ்
பல ஆண்டு காலமாக நுண்மின் னணுவியல் (microelectronics) துறையில் ஆய்வுப் பொறியாளராக பணியாற்றிய திருமதி ருக்மணி தேவி சயந்தன், இளம் தலைமுறை யினருக்குச் சிறந்த எதிர்காலத் தைப் பெற்றுத் தர, கற்பித்தல் பணிக்கு மாறினார். தொழில்நுட்பக் கல்விக் கழகத் தில் 2012ல் விரிவுரையாளராகப் பணிபுரியத் தொடங்கிய இவர், இன்று அங்கு பயிலும் ஏராளமான மாணவர்களின் வெற்றிக் கதை களுக்கு மூல காரணமாக விளங்கு கிறார்.
மாணவர்கள் ஏட்டுக்கல்வியில் சிறந்து விளங்குவதையும் அவர் கள் நல்ல பண்புநெறிகளைப் பெற்று சமுதாயத்தில் ஒழுக்கம் உடையவர்களாகத் திகழ்வதிலும் கவனம் செலுத்தும் திருமதி ருக்மணி, தளராத முயற்சிக்கும் மாணவர்கள் மீது அவர் கொண் டுள்ள அக்கறைக்கும் அங்கீகரிக் கப்பட்டார். கடந்த மாதம் 21ஆம் தேதி யன்று நடைபெற்ற தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) விருது நிகழ்ச்சியில் கடமைக்கு அப்பாற் பட்டு ஆற்றிய சேவைக்காக இவ ருக்கு 'ஐடிஇ ஆசிரியர்' விருது வழங்கப்பட்டது.
'ஐடிஇ ஆசிரியர்' விருதை வென்ற திருமதி ருக்மணி, ஐடிஇ மத்தியக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆங் கியாம் வீ உடன் உரையாடுகிறார். படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்