ப. பாலசுப்பிரமணியம்
தொடக்கப்பள்ளி பிள்ளைகளின் கைச்செலவுத் தொகையை எளி தாகக் கையாள ஒரு புதிய திட் டத்தைத் தொடங்கியுள்ளது பிஓஎஸ்பி வங்கி. பெற்றோர், தொடக்கப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக 'பிஓஎஸ்பி ஸ்மார்ட் படீ' (POSB smart buddy) என்ற திட்டத்தை வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் வழி, மாண வர் சலுகை அட்டை அல்லது 'பிஓஎஸ்பி' கடிகாரத்தைக் கொண்டு மாணவர்கள் பள்ளியில் தங்களுக்குத் தேவையான பொருட் களை வாங்கிக்கொள்ளலாம்.
சலுகை அட்டை, கடிகாரத்தைப் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள் பள்ளிகளில் அமைக்கப்படும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள கைத்தொலைபேசிச் செயலி வழி பெற்றோர் தங்கள் பிள்ளையின் செலவுகளையும் சேமிப்புகளையும் உடனுக்குடன் கண்காணிக்க முடியும். என்ன வாங்குகிறார்கள் என்பதையும் அறியலாம்.
'பிஓஎஸ்பி' கடிகாரத்தைக் கொண்டு தொடு உணர் கருவியில் 'ஸ்கேன்' செய்யும் சிறுமி. ஒரு பொருளை வாங்கிய பிறகு மீதியுள்ள, கைச்செலவுத் தொகையை தொடுஉணர் கருவியின் திரை காட்டும். படம்: 'பிஓஎஸ்பி' வங்கி