சிங்கப்பூருக்கு வருகை புரியும் அனைத்துலகச் சுற்றுப்பயணிகள் இங்கு அதிக பணத்தைச் செல வழிப்பதால் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் பயணத் துறை வருமானம் ஊக்கம் பெற்றுள்ளது என்று சிங்கப்பூர் பயணத்துறை கழகம் தெரிவித்துள்ளது. கழகம் நேற்று வெளியிட்ட பயணத்துறை தொடர்பான அறிக் கையில் இந்த விவரங்கள் குறிப் பிடப்பட்டுள்ளன.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை சிங்கப்பூருக்கு வந்த அனைத்துலக வருகையாளர் களின் எண்ணிக்கை 8.2 மில்லிய னைத் தொட்டது. இது கடந்த ஆண்டின் வருகையாளர்கள் எண் ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 13 விழுக்காடு அதிகம்.