சமிக்ஞை பிரச்சினையால் அண் மையில் வட்ட ரயில் பாதையில் பலமுறை சேவைத் தடை நிகழ்ந்த தற்கு குறிப்பிட்ட ஒரு ரயிலின் பழுதான சமிக்ஞை இயந்திரமே காரணம் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எண் 46 என்ற அந்த ரயில் சென்ற ஆண்டுதான் சேவையில் புகுத்தப்பட்டது. பழுதான சமிக்ஞை இயந்திரத்தைக் கொண்டிருந்த அந்த ரயில் இப்போது சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கோளாறுகள் வேறு எந்த ரயிலிலும் இல்லை என்ற நிலப் போக்குவரத்து ஆணையம், இருப்பினும் இன்னும் பல சோதனைகளை மேற்கொண் டிருப்பதாகவும் தெரிவித்தது.