சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை அதன் 5 நாள் மாற்று ஓடுபாதை பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கியது. 'எக்சசைஸ் டோரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயிற்சி லிம் சூ காங் சாலையில் வரும் திங்கட்கிழமை வரை நடைபெறும். அந்தச் சாலை இந்தச் சிறப்புப் பயிற்சிக்காக மாற்று ஓடுபாதையாக மாற்றப் பட்டுள்ளது. 2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலையில் அமைந்து உள்ள பேருந்து நிறுத் தும் இடங்கள், தெரு விளக்குக் கம் பங்கள், போக்குவரத்து விளக்- குகள் அனைத்தும் அகற்றப் பட்டன. அதற்குப் பதிலாக அங்கே விமானத் தள விளக் குகளும் நடமாடும் விமானப்போக்கு வரத்துக் கட் டுப்பாட்டுக் கோபுர மும் செயல்படுகின்றன. விமானம் தரையிறங்கும் போது அதன் ஓட்டத்தை நிறுத்த சிறப்பு 'பிரேக்' வடங்களும் சாலையில் பொருத்தப்பட்டன.
விமானங்கள் சுமூகமாக தரையிறங்கு வதற்கு சாலை யில் உள்ள சிறுசிறு கற்கள் இந்தச் சிறப்பு வாகனங்களால் உறிஞ்சி எடுக் கப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்