மின்னல் தாக்கி பங்களா வீட்டுக் கூரையில் தீப்பிடித்தது

கிளமெண்டி தனியார் குடியிருப்புப் பேட்டையில் அமைந்துள்ள இரண்டு மாடி பங்களா வீட்டை நேற்று முன்தினம் மின்னல் தாக்கிய தால் அதன் கூரையில் தீப்பிடித்துக் கொண்டது (படம்). நல்லவேளையாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் வீட்டின் உட்புறப் பகுதி கடுமையாகச் சேதமுற்றது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 9 சன்செட் பேலஸ் எனும் முகவரியில் அமைந்துள்ள அந்த வீட்டில் 80 வயது டாக்டர் பீட்டர் டான் அவரது மனைவியுடன் வசித்து வருவதாகச் சொல்லப்பட்டது. ஒரு கறுப்புப் பயணப்பெட்டியுடனும் ஓர் ஓவியத்துடனும் தான் வீட்டை விட்டு வெளியே வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் டாக்டர் டான் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!