சிங்கப்பூரில் உள்ள ஆசிரியர் களின் அற்புதமான திறமைகளை யும் அவர்களின் நிபுணத்துவத்தை யும் மாணவர்களின் பெற்றோர்கள் அறிந்திருந்தால், அதுவே ஆசிரி யர்கள் கொண்டிருக்கும் வேலைப் பளுவைக் குறைக்க உதவும் என கல்வி துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறியிருக்கிறார்.
மீடியாகார்ப் 938 லைவ் வானொலி நடத்திய நேர்காணலில் பங்கேற்ற டாக்டர் ஜனில், "தேசிய அளவில் பெரும் பலனை ஏற்படுத்தும் கல்வி முறையைத் தொடர்ந்து மேம்படுத்தி அதைக் கட்டிக்காத்து வரும் பணியை அரசாங்கம் சிறப் பாகக் கையாண்டு வருகிறது. "கல்வி முறையின் ஒவ்வோர் அம்சத்தையும் அரசாங்கம்தான் கவனிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. நாம் நமது கல்வி முறையில் கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வையை உலகின் பல நாடுகள் கொண்டிருக் கவில்லை," என்றார்.
முழு விவரம் - அச்சுப் பிரதியில்