பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயமுள்ள 21 வயதுக்குட்பட்ட இளை யர்களுக்கு வழிகாட்டி, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வரும் நடப்பிலுள்ள மூன்று திட்டங்களை 'ஸ்டூடன்ட்ஸ் கேர் சர்வீஸ்', 'கேர் கார்னர் சிங்கப்பூர்' ஆகிய இரு நிறுவனங்கள் இனி ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஒருங்கிணைந்த சேவை வழங்கு நர்கள்' என அழைக்கப்படும் அவ்விரு நிறுவனங்களும் அத்தகைய இளை யருக்காக ஏற்கெனவே மூன்று திட்டங்க ளைச் செயல்படுத்தி வருகின்றன.
'கைடன்ஸ்', 'என்ஹேன்ஸ்டு ஸ்டெப் அப்', 'ட்ரியாஜ்' எனப்படும் அம்மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைப்பதற் கான முதல் கட்ட முயற்சியாக அந்தத் திட்டங்களை அந்த நிறுவனங்களே தொடர்ந்து செயல்படுத்தும். இந்த ஒருங்கிணைந்த சேவை வழங்குநர்கள் மூலம் சேவைத் தரத்தில் மேம்பட்ட நிலைத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் தெரிவித்தார்.