கார் இறக்குமதி நிறுவனத்துக்குச் சொந்தமான 414,564 வெள்ளியைக் கையாடியதாக விற்பனை அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 23 வயது மலேசியரான சுவா பென் ஜுன் கடந்த மே மாதம் 17ஆம் தேதி முதல் இம்மாதம் 9ஆம் தேதி வரை இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. முன்பணம் வாங்கிய பிறகு சொன்னபடி கார்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யாதது குறித்து சுவா பணிபுரிந்த உள்ளூர் கார் நிறுவனத்துக்கு எதிராகப் பல புகார்கள் செய்யப்பட்டதாகப் போலிசார் தெரிவித்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையை அடுத்து, சந்தேகத்தின் பேரில் சுவா கடந்த ஞாயிற்றுக்கிழமை அங் மோ கியோ போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
நிறுவனத்துக்குச் சொந்தமான பணத்தைக் கையாடியதாக குற்றச்சாட்டு
16 Nov 2016 09:12 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Nov 2016 07:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!