மூப்படையும் மக்கட்தொகையால் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள சிங்கப்பூரும் டென் மார்க்கும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இந்த இரு நாடுகளிலும் நான்கில் ஒருவர் 65 வயதைக் கடந்தவராக இருப்பார். கிட்டத்தட்ட ஒரே அளவிலான நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் சிங்கப்பூரும் டென்மார்க்கும் பணக்கார நாடுகளுக்கான பட்டியலில் இடம்பெறுகின்றன. இரு நாடுகளுக்கும் இயற்கை வளங்கள் கிடையாது.
இந்நிலையில், அன்றாட வாழ்க் கையில் செயல்பட முதியோருக் கும் உடற்குறையுள்ளோருக்கும் உதவி செய்யும் தொழில்நுட்பத் தைப் (Assistive Technology) பயன்படுத்தி முதியவர்களுக்கு மறுவாழ்வு, வீடுகளில் பராமரிப்புச் சேவை ஆகியவற்றை வழங்குவதில் வெற்றி கண்டுள்ள டென்மார்க் கிடமிருந்து கற்றுக்கொண்டு சிங்கப்பூர் பலனடையலாம் என்று பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் தெரிவித்துள்ளார்.