உள்ளூர் ஊழியர்களை மேம் படுத்துவதிலும் நீக்குப்போக்கான வேலை நேரங்கள் போன்ற நடை முறைகளைப் பின்பற்றுவதிலும் நன்கு செயலாற்றி வரும் நிறு வனங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய திட்டத்தின்கீழ் சலுகைகள் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே அறிவித்துள்ளார். அந்த நிறுவனங்களுக்கென பிரத்தியேக நேரடி அழைப்பு எண் செயல்படுத்தப்படும்.
மனிதவள அமைச்சுடனான பரிவர்த்தனை களில் அந்நிறுவனங்களுக்கு முன் னுரிமை அளிக்கப்படும். தங்களது ஊழியர்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ளும் வகை யில் மானியங்கள், திட்டங்களுடன் அந்நிறுவனங் களை இணைப்பதற் காக ஆலோசனை சேவையும் கிடைக்கும். எல்லா விவரங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையிலான இந்த ஆலோசனை சேவையை நியாயமான, படிப்படி யான வேலை நடைமுறை களுக் கான முத்தரப்புப் பங்காளித்துவம் (டஃபெப்) வழங்கும்.