இவ்வாண்டு மார்ச் மாதத்தில் எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் இருவர் ரயில் மோதி மரணமடைந்த விவ காரம் தொடர்பாக 'எஸ்எம்ஆர்டி ட்ரெய்ன்ஸ்' நிறுவனம் மீதும் அதன் இரு பணியாளர்கள் மீதும் நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை எஸ்எம்ஆர்டி ஒத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெம் பனிஸ்=பாசிர் ரிஸ் எம்ஆர்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் சென்றபோது அங்கீகரிக்கப்பட்ட செயல்பாட்டு நடைமுறைகளைத் தனது ஊழியர் கள் கடைப்பிடித்தார்களா என்பதை உறுதிசெய்யத் தவறியதாகக் கூறி, வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தை மீறியதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் மீது குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டிருக்கும் லிம் சே ஹெங் (இடது), டியோ வீ கியட். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்