சட்டத்துக்குப் புறம்பாக இருமல் மருந்து விற்பனை சட்டத்துக்குப் புறம்பாகக் கடந்த பத்து ஆண்டுகளாக கோடீனை மையமாகக் கொண்ட இருமல் மருந்தை விற்ற 58 வயது மருந்தாளருக்கு 35 வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் தீமா பிளாசா கடைத் தொகுதியில் உள்ள 'கம்யூனிட்டி ஃபார்மசி' நிறுவனத்தின் உரிமை யாளரான வில்லியம் வூ டாட் மெங், விஷங்கள் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படும் முதலாவது மருந்தாளர்.