சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம்மின் அழைப்பை ஏற்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே இரண்டு நாள் அரசுபூர்வ வருகை மேற்கொண்டு இன்று சிங்கப்பூர் வருகிறார். அதிபர் டுட்டர்ட்டேயுடன் அர சாங்கத் தலைமைச் செயலாளர், வெளியுறவு அமைச்சர், தொழிலா ளர் அமைச்சர், தேசிய தற்காப்பு அமைச்சர், வர்த்தக தொழில் அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய போலிஸ் தலைமை இயக்குநர் ஆகியோர் வருகின்றனர்.
இன்று பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டேவுக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப் படும். பின்னர் அவர் அதிபர் டான், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோருடன் பேச்சு நடத்துவார். இன்றிரவு அதிபர் டான், பிலிப் பீன்ஸ் அதிபருக்கு இரவு விருந்து அளிப்பார்.