சிங்கப்பூர், பிலிப்பின்ஸ் இரு நாட்டுப் பொருளியல் கூட்டுறவை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக சிங்கப்பூர் நிறுவனங்களை பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு வெளியே முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள் ளார் சிங்கப்பூர் அதிபர் டோனி டான். தாவாவ், சிபு ஆகிய நகரங்கள் முதலீட்டுக்கான இடங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கும் இடங்களில் சில. அங்கே உள்ளூர் நிறுவனங்கள் முதலீடு செய்வது குறித்து ஆலோசிக்கலாம் என ஐஇ சிங்கப்பூர் அமைப்பு ஊக்குவிக்கிறது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் அனைத்துலகமயமாதலுக்கு உதவி புரிந்து வருகிறது ஐஇ சிங்கப்பூர். பிலிப்பீன்ஸில் தனது பங்க ளிப்பை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த ஆண்டு ஐஇ சிங்கப்பூர் தனது வளங்களை அங்கு அதிகரிக்கவிருக்கிறது என்று கூறினார் திரு டான். சிங்கப்பூருக்கு இரண்டுநாள் வருகை அளித்திருக்கும் பிலிப் பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ
சிங்கப்பூருக்கு நேற்று வருகையளித்த பிலிப்பீன்ஸ் அதிபர் டுடர்ட்டேவுக்கு (இடமிருந்து நான்காவது) சிங்கப்பூரின் அதிபர் மாளிகையில் சடங்குபூர்வ மரியாதை வழங்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி