போலியான கடிதங்கள் பொது மக்களுக்கு அனுப்பப்படுவதாக வும் அது குறித்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளும்படியும் போலி சார் பொதுமக்களுக்கு ஆலோ சனை கூறியிருக்கிறார்கள். அந்தப் போலிக் கடிதங்கள் போலிசிடமிருந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. 2016 நவம்பர் மாதம் 28ஆம் தேதி கேன்டோன்மெண்ட் போலிஸ் பிரிவில் தொல்லை விளைவித்த தாகவும் அது பற்றி புலன் விசாரணை நடப்பதாகவும் அந்தப் புலன்விசாரணையில் உதவுவதற் காக டிசம்பர் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மத்திய போலிஸ் பிரிவுக்கு நேரடியாக வரும்படியும் அந்தப் போலிக் கடிதங்கள் கேட்டுக்கொள் கின்றன.
அந்தக் கடிதத்தில் இன்ஸ் பெக்டர் வோங் கா வெய் என்ற அதிகாரியின் கையெழுத்து இருக் கிறது. இவர் மத்திய போலிஸ் பிரிவின் மூத்த புலன்விசாரணை அதிகாரி என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பற்றி எச்ச ரிக்கை விடுத்த போலிஸ், அத் தகைய கடிதங்களைத் தான் அனுப்பவில்லை என்றது.