சிங்கப்பூரில் நேற்று காலை பெய்த கனத்த மழையில் தஞ்சோங் பகார் வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற் பட்டது. கிரேக் சாலை, தஞ்சோங் பகார் சாலை, மேக்ஸ்வெல் சாலை ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக்கழகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித் தது. மேக்ஸ்வெல் சாலையில் ஏற் பட்ட வெள்ளம் குறித்து வாகன ஓட்டுநர்களை எச்சரிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று காலை 9.23 மணிக்கு டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டது. காலை 10 மணியளவில் வெள் ளம் பெரும்பாலும் வடிந்துவிட்டாலும் ஜாலான் சீவியூ, தியோங் பாரு சாலை, பூன் தியோங் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது. பின்னர், பீஷான் சாலை, இயோ சூ காங் சாலை ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக அது தெரிவித்தது.
அரசு நீதிமன்ற வளாகத்துக்கு முன் உள்ள சாலையில் ஏற்பட்ட வெள்ளம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்