யுவான் சிங் ரோட்டில் இருக்கும் ஒரு கார் பேட்டையில் பெரிய மரக்கிளை முறிந்து விழுந்ததால் ஒரு மாது காயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கார்பேட்டையில் கதவு திறந் திருந்த நிலையில் நின்றிருந்த ஒரு லாரி மேல் அந்த மரக்கிளை விழுந்துவிட்டதாகத் தெரிகிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தது.
படம்: ஃபேஸ்புக்/அலிகா பூன்