சிங்கப்பூரில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் ஒன்றில் இரு பாகிஸ்தானியருக்கு நேற்று மரண தண்டனை விதிக் கப்பட்டது. டிஷ்யூ தாள் விற்பனையாளர் களான ரஷீத் முகமது, 45, ரம் ஜான் ரிஸ்வான், 27, ஆகிய இரு வரும் தங்களது கூட்டாளி முகமது நூர், 59, என்பவரிடம் சீட்டுக்கட்டு விளையாட்டில் இழந்த பணத்தை மீட்கும் பொருட்டு அவரைக் கொலை செய்ததாகத் தெரிவிக்கப் பட்டது. ஜூன் 11ஆம் தேதி ரோவெல் ரோட்டிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த முகமது நூரிடம் $6,000 ரொக்கத்தைக் கொள்ளை யடித்த பின்னர் அவரைக் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரி விக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ரஷீத் முகமது, ரம்ஜான் ரிஸ்வான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்