சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் ரத்த அழுத்தத் திட்டத்தில் பங்கேற்க சுமார் 300 தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஜூயிங் தொடக்கப் பள்ளியில் நேற்றுக் காலை கூடினர். ரத்த அழுத்தத்தைத் துல்லியமாக அளவு எடுக்க ஜூயிங் தொடக்கப் பள்ளி மாணவர்கள் சிலர் சக மாணவர்களுக்கு உதவினர். ரத்த அழுத்தத் திட்டத்தை மேம்படுத்த சமூக இயந்திரங்கள் எவ்வாறு பயன்படுத்தப் படலாம் என்பதை ஆராய சிங்கப்பூர் இதய அறநிறுவனமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) கூட்டு ஆய்வு ஒத்துழைப்புத் திட்டத்தில் கையெழுத்திட்டன.
கல்வி அமைச்சுக் கான நாடாளுமன்ற செயலாளர் லோ யென் லிங் ஒரு மாணவிக்கு உதவுகிறார். படம்: திமத்தி டேவிட்