சிங்கப்பூரின் மரண தண்டனை வழக்குகளில் மலேசியா தலையிடாது

கோலாலம்பூர்: சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியக் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடாது என்று சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் இளங்கோ கருப்பன் கூறியிருப்பதாக பெர்னாமா தகவல் தெரிவித்தது. ஒரு குறிப்பிட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையை மலேசியாவுக்கு மாற்றுவதற்கான நெருக்குதலைக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது பற்றி தங்களுக்குத் தெரியும் என்றும் திரு இளங்கோ கருப்பன் கூறினார். போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான 30 வயது பிரபாகரன் சிங்கப்பூருக்கு எதிராக விசாரணை நடத்தக்கோரி மலேசிய உயர்நீதிமன்ற அலுவலகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பிரபாகரனுக்கு 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் அவர் செய்த அனைத்து விண்ணப்பங்களும் தோல்வி அடைந்தன.

இன்றைய செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!