அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களிலிருந்து அவர்களைக் காப்பதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய பிரசாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார். நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரிய அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பாவனா இந்த விஷயத்தை தைரியமாக வெளியில் சொன்னதையடுத்து மேலும் ஒரு சில நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்ல ஆரம்பித்து உள்ளனர்.
அந்த வரிசையில் நடிகை வரலட்சுமியும், தானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகச் சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்நிலையில், இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கப் போவதாக வரலட்சுமி சரத்குமார் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'சேவ் சக்தி' என்ற பெயரில் கையெழுத்து பிரசாரம் ஒன்றை உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.