வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஈரறை நீக்குப்போக்குத் திட்டத் திற்கு (2=Room Flexi Scheme) மூத்த குடிமக்களிடம் பேராதரவு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் வீடு வாங்கியவர்களில் 85 விழுக் காட்டினர் குறுகிய குத்தகைக் காலத்தைத் தேர்வுசெய்துள்ளனர் என்று வீவக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்தத் திட்டம் 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு நீக்குப்போக்கான குத்தகைக் காலத் திட்டத் தை வழங்குகிறது. இதன்படி, 99 ஆண்டுகால குத்தகைக்குப் பதிலாக 15 முதல் 45 ஆண்டுகள் கொண்ட குறு கிய கால குத்தகைக்கு வீடு களை மூத்த குடிமக்கள் வாங்க லாம். குத்தகைக் காலத்தின் அடிப்படையில் வீடுகளின் விலை நிர்ணயிக்கப்படும். மேலும் வீட்டை வாங்கும் முதியோர், அடமானக் கடனுக்குப் பதிலாக ரொக்கத் தொகை அல்லது மத்திய சேமநிதி சேமிப்பின் வழியாக வீட்டுக்கான தொகை யைச் செலுத்துவர்.