தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி எல்லா நிறுவனங்களுமே மின்னி லக்கப் பொருளியலின் அனுகூலத் தைப் பயன்படுத்திக்கொண்டு உற்பத்தித்திறனைப் பெருக்கி, ஊழியர்களின் சம்பளத்தைக் கூட்ட வேண்டும் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தி இருக்கிறார். சிங்கப்பூர் கணினிச் சங்கத் தின் 50வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் வெள் ளிக்கிழமை நடந்த விருந்து ஒன்றில் அவர் உரையாற்றினார்.
புத்தாக்கத்தை உலகத்தர அளவுக்கு கைக்கொள்ளும் ஒரு சூழ்நிலையை சிங்கப்பூர் உரு வாக்குகிறது என்றாலும் புதிய தொழில்நுட்பங்கள் பொருளிய லின் இதர துறைகளுக்கும் வேக மாக, பரவலாக, முழுவதுமாக பரவ வேண்டும் என்றார் அவர். இதனைச் செய்ய ஏற்கெனவே சிங்கப்பூர் முயற்சிகளை தொடங்கிவிட்டது என்று அவர் தெரிவித்தார். கணிதம், அறிவிய லில் ஆற்றல்மிக்க ஊழியரணி சிங்கப்பூரின் பேணி வளர்க்கப்படு வதை அவர் சுட்டிக்காட்டினார்.