தோ பாயோவில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடு ஒன்றில் இரவு நேர குழந்தைப் பராமரிப்பு நிலையம் 10 பிள்ளைகளுடன் நடந்து வருவ தாக அந்தப் புளோக் குடியிருப் பாளர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் அன்றாடம் மாலை 6 மணிக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளை அந்த வீட்டிற்கு கொண்டுவந்துவிடுவதாக அவர் கள் கூறியதாக ஷின் மின் நாளி தழ் தெரிவித்துள்ளது.
அந்தப் பிள்ளைகள் தொடக் கப்பள்ளி செல்பவர்கள். சிலருக்கு ஐந்து வயது. சில பிள்ளைகளைப் பெற்றோர்கள் கொண்டு வந்து விடுகிறார்கள். மற்ற பிள்ளைகள் பள்ளிக்கூடப் பேருந்தில் வருகிறார் கள். அந்த நிலையத்தில் சில மணி நேரம் பிள்ளைகள் தங்குகிறார்கள். சில பிள்ளைகள் இரவு முழுவதும் தங்குகிறார்கள் என்று குடியிருப் பாளர் ஒருவர் கூறியதாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்தது.