லாசால் கலைக்கல்லூரி மாணவி பிரியகீதா தியா தங்கப் படிக்கட்டு களை அகற்றிவிட்டார். அந்த மாணவி உருவாக்கியிருந்த தங்கப் படிக்கட்டு, சிங்கப்பூரில் பொது இடங்களில் கலைகள் இடம்பெறுவது பற்றி பெரும் விவா தத்தைக் கிளப்பிவிட்டது. "தங்கப் படிக்கட்டை உருவாக் கியதும் நான்தான். அதற்கு முடிவுகட்டியதும் நான்தான். இதில் வேறு யாருக்கும் எந்தப் பொறுப்பு மில்லை. சிறு அடையாளம் மட்டும் மிஞ்சி இருக்கிறது," என்று அந்த மாணவி நேற்று ஃபேஸ்புக் பக்கத் தில் தெரிவித்து இருந்தார். சிறு அடையாளம் என்பது கடைசிப் படியில் எஞ்சியிருந்த ஒரு சிறு சதுர தங்க நிறத் தாளைக் குறிப்பதாக இருந்தது. குமாரி பிரியகீதா, 25, தன் னுடைய இறுதிஆண்டு கல்வி செய்முறைப் பயிற்சித் திட்டத்திற் காக, ஜாலான் ராஜாவில் இருக்கும் வீவக புளோக் ஒன்றில் 20வது மாடி படிக்கட்டுகளில் தங்கநிறத் தாட்களை ஒட்டி அந்தக் கலைப் படைப்பை உருவாக்கி இருந்தார்.
ஜாலான் ராஜாவில் இருக்கும் வீவக புளோக் ஒன்றின் 20வது மாடி படிக்கட்டில் லாசால் மாணவி பிரியகீதா தியாவின் தங்கப்படிக்கட்டு இருந்த இடத்தில் ஒரு சிறு சதுர தங்க ஒட்டுத்தாள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. படம்: பிரியகீதா தியா/ஃபேஸ்புக்