சிங்கப்பூரில் விரைவுச்சாலைகளில் செல்லும் மோட்டார் சைக்கிளோட்டிகள், மழைபெய்யும்போது அல்லது களைப்பாக இருக்கும்போது நிழலில் ஒதுங்குவதற்காக 80 மழைக்கு ஒதுங்குமிடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. சிங்கப்பூரின் 10 விரைவுச்சாலையில் இருக்கும் மேம்பாலச் சாலைகளுக்கு கீழே அத்தகைய ஒதுங்குமிடங்கள் கட்டப் பட்டிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
இவற்றின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது 33% அதிகம். 2009ல் சுமார் 1,00 மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கு இடம் அளிக்கும் வகையில் 60 உறைவிடங்கள் இருந்தன. 2008ல் 29 ஒதுங்குமிடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நிலப் போக்குவரத்து ஆணையம் மோட்டார்சைக்கிள் ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக $2.58 மில்லியன் செலவில் இத்தகைய ஒதுங்குமிடங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கி இருக்கிறது. இவை ஒவ்வொன்றிலும் 10 முதல் 20 மோட்டார்சைக்கிள் ஓட்டிகள் ஒதுங்க முடியும்.