சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் வல்லுநர்கள், புகை மூட்டத்தில் காணப்படும் பிஎம்2.5 என்ற உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய துகள்களைத் தடுக்கக்கூடிய வடிகட்டி ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பிளாஸ்டிக் இழைகளைக் கொண்டு உருவாக்கப்படும் வலை துணிகளைக் கொண்டு இந்த வடிகட்டியை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். சாயங்களில் பொதுவாக பயன் படுத்தப்படும் ஒரு ரசாயன கூட்டுப் பொருளைப் பயன்படுத்தி கரிம மூலக்கூறுகளை அவர்கள் உரு வாக்கி இருக்கிறார்கள். இந்த மூலக்கூறுகள் அந்த பிளாஸ்டிக் வலை துணிகளில் உள்ள ஓட் டைகளில் சென்று அவற்றை அடைத்துக் கொண்டு சல்லடைப் போல் ஆகிவிடும்.
புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த குழுவைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டான் சுவீ சிங் (இடது), சாய் கிஷோர் ரவி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்