சென்னை: பிணையில் வெளிவந்த மூன்றாவது நாளே தொழிலதிபர் சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப் பட்டுள்ளார். அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக கடந்தாண்டு கைதானார் சேகர் ரெட்டி. சென்னையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற் கொண்டனர். அப்போது லட்சக் கணக்கான புதிய, பழைய ரூபாய் நோட்டுகள் குவியல் குவியலாகச் சிக்கின.
இதையடுத்து அவர் அமலாக்கத்துறை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது நான்கு கூட்டாளிகளும் கைதாகினர். தொடக்கத்தில் சேகர் ரெட்டிக்கு பிணை வழங்கப்படவில்லை. அவரது கூட்டாளிகளில் இருவருக்கு மட்டும் நிபந்தனை பிணை கிடைத்தது. இதையடுத்து சேகர் ரெட்டி உள் ளிட்ட மூவரும் சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்ய, அதை விசாரித்த நீதிமன்றம், மூவருக்கும் நிபந்தனை பிணை வழங்கியது. கடந்த 17ஆம் தேதி பிணையில் வெளிவந்த அவரை நேற்று முன்தினம் அமலாக்கப் பிரிவு போலிசார், சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்த குற்றத்தின் பேரில் மீண்டும் கைது செய்துள்ளனர்.