வருடாந்திர சம்பள வழிகாட்டிகள்: கருத்து கூற மக்களுக்கு அழைப்பு

தனது வருடாந்திர சம்பள பரிந்துரைகள் குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க தேசிய சம்பள மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மன்றம் கூடி இந்த ஆண்டுக்கான சம்பள பரிந்துரைகளையும் அதற்குரிய வழி காட்டிகளையும் முடிவெடுக்கும் என்று மன்றத்தின் அறிக்கை தெரிவித்தது. "சம்பள பரிந்துரைகளை வகுக்கும்போது, சிங்கப்பூரின் பொருளியல் நிலைமை, அதன் போட்டித்தன்மை, உள்நாட்டு, உலகளாவிய பொருளியல் நிலை, தொழிலாளர் சந்தை நிலைமை, பணவீக்கம், உற்பத்தித்திறன் வளர்ச்சி ஆகியவற் றைக் கருத்தில் கொண்டு தேசிய சம்பள மன்றம் செயல் படும்," என்றும் அறிக்கை கூறியது. தேசிய சம்பள மன்றத்தில் என்டியுசி ஊழியர் சங்கங் களின் பிரதிநிதிகள். முதலாளிகள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!