சுதாஸகி ராமன்
உடல் ரத்த அழுத்தத்தை வீட்டில் இருந்தபடியே வசதியாக சோதித் துக் கொள்வதைப் போல் மருத்துவ மனைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடி கண் அழுத்தத்தைச் சோதிக்கவும் இப்போது முடியும். 'க்ளாவ்கோமா' எனப்படும் ஒரு வித கண் நோயை ஏற்படுத்தும் கண் அழுத்தம், சரியான சிகிச்சை முறையில்லாமல் கண் பார்வை இழப்பில் முடிவடையும். தொடக்கத் திலேயே இந்நோயைக் கண்டு பிடிக்க டான் டோக் செங் மருத்துவ மனையின் புதிய திட்டம் வழி வகுக்கிறது. ஆண்டுக்கு சுமார் நான்கு முதல் ஆறு முறை மருத்துவமனை சோதனைக்கு வரும் நோயாளிகள், இப்போது வீட்டிலேயே சோதனை களை மேற்கொள்ள 'ஐகேர்' சோதனைக் கருவிகளை அவர் களுடன் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறது மருத்துவமனையின் புதிய செயல்திட்டம். இதுவரை ஆண்டுக்கு சுமார் இரண்டு அல்லது மூன்று முறை சோதனைகளை மேற்கொள்ளும் நோயாளிகள் 'ஐகேர்' கருவியைப் பயன்படுத்தி ஒரு நாளுக்கு நான்கு சோதனைகள் என வாரத் திற்கு 28 சோதனைகளை மேற் கொள்கின்றனர்.