தமிழவேல், செய்தி ஆசிரியர்
கிறிஸ்துவர்கள், யூதர்களின் மனங்களைப் புண்படுத்தும் வித மாக கருத்துத் தெரிவித்த சமய போதகர் தமது செயலுக்காக அனைத்து சிங்கப்பூரர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார். சௌத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஜாமிஆ சூலியா பள்ளி வாசலில் இடம்பெற்ற சமய போதனை தொடர்பான ஒரு காணொளி கடந்த பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த போதனையில் கிறிஸ் தவர்களையும் யூதர்களையும் பற்றி அந்தச் சமய போதகர் பேசியபோது 'வெற்றி கொள்ள வேண்டும்' எனும் பொருள்படத் தக்க அரபுச் சொல்லைப் பயன் படுத்தியிருந்தார். இச்சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை நடந்து வருகிறது என நாடாளு மன்றத்தில் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரி வித்திருந்தார்.
மேக்ஸ்வெல் சாலையில் உள்ள 'ஹார்மனி இன் டைவர்சிட்டி' காட்சியகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல சமயத் தலைவர்கள் முன்னிலையில் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டார் சமய போதகர் நல்லா முகம்மது அப்துல் ஜமீல் அப்துல் மாலிக் (வலது). படம்: நீல் பிரையன்