தேசிய சேவையின் 50வது ஆண்டை குறிக்கும் வகையில் தேசிய சேவையாளர்கள் அனை வரும் இலவசமாக 'என்எஸ்50 பேஷன் நினைவு அட்டையைப் (NS50 PAssion card ) பெற தகுதி பெறுகிறார்கள். இதனுடன் அவர் களுக்கு ஐந்து உறுப்பியங்களும் கிடைக்கும். இந்த இலவச அட்டைக்கான விண்ணப்ப நிபந்தனைகள் தேசிய சேவையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இவற்றை அவர்கள் சமூக மனமகிழ் மன்றங்களிலும் நீர்நிலை துணிகரச்செயல் நிலை யங்களிலும் பேஷன் கார்டு வியா பாரிகளிடத்திலும் பயன்படுத்த முடியும். இந்த விண்ணப்ப நிபந்தனை கள் தேசிய சேவையாளர்களுக் கான என்எஸ்50 அங்கீகார $100 பற்றுறுதிச் சீட்டுடன் இந்த ஆண்டு கிடைக்கும். தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், உள் துறை அமைச்சர் கா சண்முகம், இரண்டாவது தற்காப்பு அமைச்சர் ஓங் யீ காங் ஆகியோர் நேற்று நடந்த தனித்தனி நிகழ்ச்சிகளில் அங்கீகார பரிசுகளை வழங்கினர்.
சஃப்ரா தோ பாயோவில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், (இடமிருந்து 2வது) பீஷான்= தோ பாயோ குழுத்தொகுதி அடித்தள அமைப்பு ஆலோசகர் சக்தியாண்டி சுப்பாட், (வல மிருந்து 2வது) ஆகியோர் தேசிய சேவையாளர்கள், அவர்களின் குடும்பத்தாருக்கு என்எஸ்50 அங்கீகார பரிசை வழங்கினர். படம்: மக்கள் கழகம்