58 வயது ஆடவரை கத்தியால் தாக்கிய 66 வயது ஆடவர்

சாய் சீ அவென்யூவில் சனிக் கிழமையன்று ஓர் ஆடவரை கத்தி யால் வெட்டியதாகக் கூறப்படு வதையொட்டி 66 வயது நபர் ஒருவர் கைதாகியிருக்கிறார். ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்காக அந்த ஆடவர் கைது செய்யப் பட்டிருக்கிறார் என்று போலிஸ் தெரிவித்துள்ளது. தாக்கப்பட்ட 58 வயது ஆடவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் சாய் சீ அவென்யூவில் இருக்கும் 38வது புளோக்கில் சனிக்கிழமை மாலை சுமார் 6 மணிக்கு நிகழ்ந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!