சிங்கப்பூர் ஆற்றுப் பகுதியில் புதிதாகப் பிறந்திருக்கும் ஐந்து நீர்நாய்க் குட்டிகள் அப்பகுதியில் குடியிருப்போரையும் அங்கு செல்வோரையும் கவர்ந்திழுக்கின்றன. அவை கிட்டத்தட்ட ஆறு வார குட்டிகள் என நம்பப்படுகின்றன. அருகி வரும் விலங்கினமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நீர்நாய்கள் பீஷான் பகுதியில் காணப்படுகின்றன.
சிங்கப்பூர் ஆற்றோரத்தில் உள்ள படிக்கட்டுகளில் விளையாடும் நீர்நாய்க் குட்டிகளைப் பார்த்து ரசிக்கும் மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்