1,000 படுக்கைகளுடன் தயாராகும் செங்காங் பொது மருத்துவமனை

அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கும் செங்காங் பொது மருத் துவமனைக்கான கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவு அடையும் கட்டத்தில் உள்ளது. சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் வசிப்போரின் மருத் துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயா ராகி வருகிறது. எங்கர்வேல் ஸ்திரீட்டில் அமைந்திருக்கும் இந்த மருத் துவமனைக் கட்டடத்துக்குச் சாயும் பூசும் பணி நிறைவடைந்து விட்டது. அதுமட்டுமல்லாது, மருத்துவ மனையின் பிரதான வாசலுக்குச் செல்லும் வழியைக் காட்டும் அறிவிப்புப் பலகைகளும் பொருத் தப்பட்டுள்ளன. செங்காங் பொது மருத்துவ மனைக்குப் பக்கத்தில் 400 படுக்கைகள் கொண்ட செங்காங் சமூக மருத்துவமனையும் அடுத்த ஆண்டு தனது சேவையைத் தொடங்கும். தற்போது அலெக்சாண்டிரா மருத்துவமனையை நிர்வகித்து வரும் செங்காங் சுகாதாரக் குழு செங்காங் பொது மருத்துவ மனையை நிர்வகிக்கும்.

அடுத்த ஆண்டு திறக்கப்படவிருக்கும் செங்காங் பொது மருத்துவமனை. அதற்குப் பக்கத்தில் 400 படுக்கைகள் கொண்ட செங்காங் சமூக மருத்துவமனையும் அடுத்த ஆண்டு திறக்கப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!