சிங்கப்பூரில் 55 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் நீர் விளையாட்டுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் கழகம் 'சில்வர் வேவ்' எனப்படும் புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வோர் ஆண்டும் 1,000 மூத்த குடிமக்களை மிதிப் படகு செலுத் துதல் போன்ற நீர் விளையாட்டு களில் ஈடுபடுத்த கழகம் முற்படு கிறது. இந்தப் புதிய திட்டத்தின் கீழ் மக்கள் கழகத்தின் நீர் விளை யாட்டுப் பிரிவு முதியோருக்கான மிதிப் படகு பயிற்சியை நடத்த வுள்ளது.
மூத்த குடிமக்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நீர் விளையாட்டு களில் பங்கேற்க கூடுதலான வாய்ப்புகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட 'சில்வர் வேவ்' திட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்