மேம்படுத்தப்பட்ட வாழ்நாள் பரிசோதனைத் திட்டத்தின்கீழ், ஐந்து வெள்ளி சுகாதார பரிசோதனைக்குத் தகுதி பெறும் 1.8 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் அது குறித்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்தக் கடிதத்தைக் கொண்டு சமூக சுகாதார உதவித் திட்டத்தின்கீழ் (Chas) நாடெங்கும் உள்ள 1,000 தனியார் மருந்தகங் களில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு, கருப்பைவாய் புற்றுநோய், பெருங் குடல் புற்றுநோய் போன்ற வற்றுக்கான சோதனைகளைச் செய்துகொ ள்ளலாம். மருந்தகங் களுடன் தொடர்புகொண்டு சோதனைக்கான தேதியை முன்கூட்டியே வாங்க வேண்டும். இந்த பரிசோதனைத் திட்டம் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும்.
40 வயதும் அதற்கும் மேற் பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் இந்த $5 உடல்நலப் பரிசோத னைக்குத் தகுதி பெறுவர். $5 கட்டணம் சோதனைகளுக் கும், சோதனைகளில் நோய் கூறுகள் கண்டறியப்பட்டால் அதற்குப் பிறகான மருத்துவரின் ஆலோசனைக்குமானது.