ஆட்கடத்தலுக்கு எதிராக சிங்கப்பூர் கொண்டு வந்த புதிய சட்டத்தின்கீழ் இதுவரை எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை குறைவாகத் தோன்றினாலும், பாலியல் குற்றங்கள், ஏமாற்றியோ கட்டாயப்படுத்தியோ சிங்கப் பூருக்கு கொண்டு வரப்பட்டவர் களை அவர்களுக்கு விருப்பமில் லாத வேலையை செய்ய வைப்பது போன்ற குற்றங்கள் இதைவிட அதிகம் என்று நம்ப இடமுள்ளது.
சிங்கப்பூர் ஒரு பொருளியல் மையம் என்பதாலும் இங்கு மக்கள் போக்குவரத்து அதிகம் என்பதாலும் அப்பாவிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஈடுபட வைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக சிங்கப்பூர் போலிஸ் படையின் துணைக் கண்காணிப்பாளரான லியாவ் டெக் வீ செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.