ஒன்பது பொழுதுபோக்கு மையங்களில் நேற்றுமுன்தினம் போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 14 பெண்கள், மூன்று ஆடவர் என மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். போலிஸ் படை, போக்குவரத்து போலிஸ், மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை ஆகிய அமைப்புகள் சனிக்கிழமை மேற் கொள்ளப்பட்ட எட்டு மணி நேரச் சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
வேலை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக 14 பெண்கள் கைது செய்யப்பட்டனர். படம்: வான்பாவ்