அப்பர் ஜூரோங் ரோட்டில் நேற்று முன்தினம் பெரிய மரம் ஒன்று வேரோடு சரிந்ததில் சிங்கப்பூர் டிஸ்கவரி சென்டருக்கு அருகே யிருந்த கூரை வேயப்பட்ட நடைபாதை சேதமானது. பேருந்து நிறுத்துமிடத்துக்கு அருகே சாலையின் குறுக்கே விழுந்த அந்த மரம் சாலையை முழுவதுமாக முடக்கியது. வேரோடு சரிந்த மரம் பேருந்து நிலையத்தின் அருகேயிருந்த நடைபாதையின் கூரையைப் பெயர்த்திருப்பதைப் படங்கள் காட்டின. அன்று பிற்பகலில் அந்தப் பாதை வழியாகச் சென்ற திரு சான், "அது பெரிய ராட்சத மரம்" என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் விவரித்தார். ஜூரோங் பாயிண்டை நோக்கிச் செல்லும் அப்பர் ஜூரோங் சாலையை குறுக்குவாட்டில் முழு வதுமாக அடைத்துக்கொண்டு மரம் விழுந்து கிடந்ததாக அவர் கூறினார்.
வேரோடு பெயர்ந்து விழுந்து கிடக்கும் மரமும் அதனால் சேதமடைந்திருக்கும் நடைபாதைக் கூரையும். படம்: ஸ்டோம்ப்