அமெரிக்காவின் பயனீட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவன மான புரொக்டர் & கேம்பல் (பி&ஜி) நிறுவனம், தன்னுடைய முதலாவது மின்னிலக்கப் புத்தாக்க நிலை யத்தை சிங்கப்பூரில் அமைக்கிறது. இந்த நிலையத்தில் அது அடுத்த ஐந்தாண்டுகளில் US$100 மில்லி யன் தொகையை முதலீடு செய்யும். பொருளியல் வளர்ச்சிக் கழகத் துடன் சேர்ந்து அமெரிக்க நிறு வனம் இந்த முதலீட்டைச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடு, பி&ஜி நிறுவனம் சிங்கப்பூரில் கொண்டிருக்கும் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்து கிறது. உலகில் மின்னிலக்க மற்றும் இணைய வர்த்தக மையம் என்ற சிங்கப்பூரின் நிலையை இந்த முதலீடு பலப்படுத்துகிறது. பி&ஜி நிறுவனம் சிங்கப்பூரில் அமைக்கவிருக்கும் புத்தாக்க நிலையத்திற்கு 'சிங்கப்பூர் இ-சென்டர்' என்று பெயர். இதுவே இந்த பன்னாட்டு நிறு வனம் அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கும் முதலாவது நிறுவன மாகும். இது மூன்று முக்கிய துறைகளில் மின்னிலக்கப் புத் தாக்கத்தை விரிவுபடுத்தும். பொருட்கள் விநியோகத் துறை நிர்வாகம், மின்னியல் பகுப்பாய் வுகள், இணைய வர்த்தகம் ஆகி யவை அந்தத் துறைகள். இந்தப் புதிய நிலையம் நேற்று தொடங்கப் பட்டது.
அமெரிக்க நிறுவனம் US$100 மி. முதலீடு; மின்னிலக்கப் புத்தாக்க நிலையம் அமையும்
19 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2017 07:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!