அமெரிக்காவுக்கு பயணம் மேற் கொண்டிருக்கும் துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் செடோ னாவில் இருக்கும் மெக்கைன் கழகம் ஏற்பாடு செய்து நடத்திய செடோனா கருத்தரங்கில் கலந்து கொண்டார். வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் இதைத் தெரி வித்தது. செடோனா கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அமெரிக்காவின் தலைவர்களும் அனைத்துலகத் தலைவர்களும் அழைப்பு இருந்தாலொழிய அந்த வருடாந்திர கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியாது. அந்தக் கருத்தரங்கில் இடம் பெற்ற கலந்துரையாடலில் 'ஆசியா விலிருந்து ஒரு கண்ணோட்டம்' என்ற தலைப்பில் துணைப் பிரதமர் டியோ உரையாற்றினார். ஆசியா வில் அமெரிக்கா தொடர்ந்து இருந்துவர வேண்டியதன் முக்கி யத்துவத்தை அவர் வலியுறுத்திக் கூறினார்.
துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் (வலது) அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச் ஆர் மெக்மாஸ்டரை சந்தித்தார். வட்டார, அனைத்துலக நிலவரங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர். படம்: வெளியுறவு அமைச்சு