உடற்பயிற்சி வகுப்பின்போது கோல் கம்பத்தில் அடிபட்டுவிட்ட 12 வயது மாணவன் நேற்று மருத்துவமனையில் மாண்டான். இந்தச் சம்பவம், கேலாங் ஈஸ்ட் சென்ட்ரலில் இருக்கும் கேலாங் மெத்தடிஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்குப் பிறகு நிகழ்ந்ததாகத் தெரிகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்றுத் தெரிவித்தது. அந்தப் பையன் காலையில் தன் பள்ளிக் கூட சகாக்களுடன் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது கோல் கம்பத்தைப் பிடித்ததாகவும் அந்தக் கம்பம் அவன் மீது விழுந்துவிட்டதால் தலையில் அடி பட்டுவிட்டது என்றும் தெரிகிறது.
மாண்ட மாணவன். படம்: சாரா அகுயிலா