வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகள் குறித்து பிரதமர் லீ சியன் லூங் ஆழ்ந்த கவலையை வெளிப் படுத்தி உள்ளார். கொரிய தீப கற்பத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஒன்று கூடிய ஆசியான் தலைவர்களி டையே திரு லீ தமது கருத்து களை வெளிப்படுத்தினார். அனைத்துலக சமூகம் வட கொரியா மீதான பொருளியல், தூதரக அழுத்தங்களை அதிகரித்து அதனைத் தனிமைப்படுத்தி வரும் நிலையில் நேற்றும் ஓர் ஏவுகணைச் சோத னையை அது நிகழ்த்தியது.
பிரதமர் லீ குறிப்பிடுகையில், "கடந்த ஆண்டு செப்டம்பரிலும் இவ்வாண்டு ஜனவரியிலும் நிகழ்த்தப்பட்ட இரண்டு அணு வாயுதச் சோதனைகள், இவ் வாண்டு தொடங்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணைச் சோதனை, இன்று மற் றோர் சோதனை என தொடர்ச்சி யாக வடகொரியா வேண்டு மென்றே நிகழ்த்திவரும் எரிச் சலூட்டும் செயல்கள் குறித்து சிங்கப்பூர் பெரிதாகக் கவலை கொள்கிறது," என்றார்.
பிரதமர் லீ சியன் லூங்