உபி வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்தின் ஏழாவது மாடியில் நேற்று தீ முண்டது. ஏறத்தாழ 15 குடியிருப்பாளர் பத்திரமாக வெளி யேற்றப்பட்டனர். ஏழாவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டின் படுக்கையறையில் தீ முண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. தீப் பிடித்து எரிந்த வீட்டில் இருந்த மூவர் அவர்களாகவே அந்த வீட்டை விட்டு பத்திரமாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.
பக்கத்து வீடுகளில் இருந்த ஏறத்தாழ 15 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிமைத் தற்காப்புப் படையினரும் போலிசாரும் பத்திர மாக வெளியேற்றினர். 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீயினால் ஏற்பட்ட புகையைச் சுவாசித்து அவுதியுற்றதால் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.