சிங்கப்பூரில் மட்டுமன்றி, ஆசி யான் வட்டாரத்திலும் வசதி வாய்ப்பற்ற மக்களின் வாழ்க் கையில் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்திய சமூக அமைப்பு களுக்கும் தனிமனிதர்களுக்கும் கொ டை யா ள ர் க ளு க் கு ம் அங்கீகாரமளிக்க புதிய சமூகத் தொழில்முனைப்பு விருது நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. ‚'அறப்பணித் தந்தை' என்று அறியப்படும் காலஞ்சென்ற டாக்டர் ஈ பெங் லியாங்கின் அறப் பணித் திட்டங்களைத் தூண்டு கோலாகக் கொண்டு, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை ‚ஆசியான் சமூக நல்விளைவு விருதை அறிமுகப்படுத்தியது.
சமூக உண்டியல், சிங்கப்பூர் சமூகச் சேவை மன்றம் போன்ற பல்வேறு அறப்பணி அமைப்பு களைத் தோற்றுவித்த தொழில் அதிபர் டாக்டர் ஈ. ‚"உண்மையான சமூகத் தொண்டாளரே நாங்கள் பரப்ப விரும்பும் செய்திக்கான சிறந்த எடுத்துக்காட்டு," என்றார் விருதின் தலைவர் திரு ஸ்டான்லி டான். ‚ "இந்தப் பாதையைக் கடந்து வந்த ஒருவரை எடுத்துக் காட்டு வதன்மூலம், தற்போது (சமூகப் பணி) செய்து வருவோருக்கு அதிக தூண்டுதலும் ஊக்கமும் கிடைக்கும்," என்றார் அவர்.