காபூல்: ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் பகுதியில் உள்ள போராளிகளின் மறைவிடங்கள் மீது பத்து நாட்களுக்கு முன்பு அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் போராளிகள் பலர் கொல்லப் பட்டனர். அத்தாக்குதலில் ஆப்கானில் உள்ள ஐஎஸ் குழுவின் தலைவன் அப்துல் ஹசிப் கொல்லப்பட்ட தாக அமெரிக்காவும் ஆப்கானும் தற்போது தெரிவித்துள்ளன. கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் அதிநவீன குண்டுகளை வீசித் தாக்கியதாக அமெரிக்க அதி காரிகள் கூறினர்.
அத்தாக்குதலில் அப்துல் ஹசிப் கொல்லப்பட்டதை ஆப்கானிஸ் தானில் உள்ள நேட்டோ படைப் பிரிவின் தளபதியான ஜான் நிக்கோல்சன் உறுதிப்படுத்தி யுள்ளார்.