கனரக வாகனமொன்று கண்மூடித்தனமாகச் சென்றதால் அவ்வழியே நடந்து சென்ற இரண்டு பாதசாரிகள் மீது மோதவிருந்து, பின்னர் அங்கிருந்த போக்குவரத்து விளக்குக் கம்பங்களில் மோதியது. இந்தச் சம்பவம் ஜூரோங்கின் பைனியர் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு நடந்தது. இதை அவ்வழியே வாகனம் ஓட்டிச் சென்ற திரு கேரி லீ என்பவரின் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த புகைப்படக்கருவி பதிவுசெய்தது. இந்தக் காணொளி 'ரோடு.எஸ்ஜி'=யின் ஃபேஸ்புக் தளத்தில் நேற்று முன்தினம் பதிவேற்றப்பட்டது. அந்தக் காணொளியைப் பார்வையிட்ட பலரும் கனரக வாகனமோட்டியைச் சாடியிருந்தனர். போக்குவரத்து பைனியர் ரோடு, இன்டர்நேஷனல் ரோடு சந்திப்பில் நடந்த இந்த மோதலில் சமிக்ஞை விளக்குகள் உடைந்திருந்ததை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் பார்வையிட்டு அது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கண்மூடித்தனமாகச் சென்ற கனரக வாகனம்; உயிர் தப்பிய பாதசாரிகள்
17 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 May 2017 08:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!