உடல் அல்லது தலை வலியினால் பாதிக்கப்படுவோரால் சிங்கப்பூர் பொருளியலுக்கு ஒவ்வோர் ஆண்டும் $8.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு சிங்கப்பூர் ஊழியர்கள் உடல் வலி காரணமாக சராசரியாக மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தனர். வலியைப் பொறுத்துக்கொண்டு வேலைக்குச் சென்றவர்களுக்கு உற்பத்தித்திறன் 15 விழுக்காடு குறைந்தது. இருப்பினும், வலி நிவாரணத்திற்கு ஏராளமானோர் உதவி நாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வலியைப் பற்றி குடும்பத்தினரிடமோ அன்புக்குரியவர்களிடமோ சொல்லாமல் அவதியுறுவதாக ஆய்வின் முடிவுகள் குறிப்பிட்டன. மூன்று பேரில் ஒருவர் வலியைப் பொருட் படுத்துவதில்லை. 32 நாடுகளில் 19,000 பெரியவர்கள் '2017 ஜிஎஸ்கே குளோபல் பெய்ன் இன்டெக்ஸ்' எனப்படும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். உலகம் முழுதும் 85 விழுக் காட்டினர் தலை, உடல் வலியால் அவதியுறுகின்றனர். சிங்கப்பூரிலும் இதே விழுக்காட்டினர் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
உடல், தலை வலியினால் நாட்டிற்கு $8.4 பி. இழப்பு
21 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jun 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!